அழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன்: ஜான்டி ரோட்ஸ் பாராட்டும் இந்தியப் படம்!

கல்லி பாய் என்கிற ஹிந்திப் படம் தன்னைக் கவர்ந்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
அழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன்: ஜான்டி ரோட்ஸ் பாராட்டும் இந்தியப் படம்!
Published on
Updated on
1 min read

கல்லி பாய் என்கிற ஹிந்திப் படம் தன்னைக் கவர்ந்துள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கடந்த வருடம் ஒரு நிகழ்ச்சியில் சித்தாந்த் சதுர்வேதியைச் (கல்லி பாய் படத்தில் நடித்தவர்) சந்தித்தது முதல் கல்லி பாய் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். விமானத்தில் வந்தபோது முழுப்படத்தையும் பார்த்து முடித்தேன். சப்டைட்டில்களுக்கு நன்றி. நான் அழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன் என்று கூறியுள்ளார். 

ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் - கல்லி பாய். கடந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com