அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனாவால் உயிரிழந்த தமிழ் நடிகர்

2017-ல் வெளியான என்கிட்ட மோதாதே படத்தில் நடித்தவர் பிளோரண்ட் சி பெரேரா

News image
Updated On :15 செப்டம்பர் 2020, 9:59 am

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகரும் ஊடகத்தைச் சேர்ந்தவருமான பிளோரண்ட் சி பெரேரா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 67.

2003-ல் வெளியான புதிய கீதை படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகராக அறிமுகமானார். சத்ரியன், வேலையில்லா பட்டதாரி 2, கயல் போன்ற படங்களில் நடித்துள்ளார். கலைஞர், வின், விஜய் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிளோரண்ட் சி பெரேரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார். 

பிளோரண்ட் சி பெரேராவின் மறைவுக்குப் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.