ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் : அவரது தங்கை உருக்கமான பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 7:33 am

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரவண விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டதாக அவரது தங்கை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடருக்கென பிரத்யேகமாக ரசிகர்கள் உள்ளனர். இந்தத் தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்த சித்ரா கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

Story image

மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை பேசும் இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுவாரசியமான திருப்பங்களுடன் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

சமீபத்தில் தொடரில் கண்ணனின் திருமண நிகழ்வு அவர்களது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் குறித்த கருத்துகளை ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இந்தத் தொடரில் கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரமிற்கு திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அவரது தங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் திருமண நிகழ்வில் கண்ணன் வாகனம் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்ட போது விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் வலியையும் பொருட்படுத்தாது அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

Story image

படக்குழுவினரிடம் தனக்கு காயம் ஏற்பட்டதை அவர் சொல்லவில்லை. வலி இருந்தும் அந்த காட்சியில் கண்ணன் சிறப்பாக நடித்தார். ஒரு தங்கையாக உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அண்ணா. தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளியுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.