நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எருமை மாட்டைப் பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: அதிர்ச்சி சம்பவம்

எருமை மாட்டைப் பலியிட்டு அதன் ரத்தத்தை நடிகர் சுதீப்பின் படத்தில் தெளித்து ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 5:56 pm IST

எருமை மாட்டைப் பலியிட்டு அதன் ரத்தத்தை நடிகர் சுதீப்பின் படத்தில் தெளித்து ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நான் ஈ', 'புலி' படங்களின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் அவரின் 50 நாள் பிறந்த நாள் விழா ரசிகர்கள் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பிறந்த நாளைக் கொண்டாடினர்.

இந்த நிலையில் கர்நாடகம் பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான சுதீப் ரசிகர்கள் ஒன்று கூடி கட் அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடினர். 

அப்போது சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதைப் பலியிட்டு அந்த ரத்தத்தைக் கட் அவுட் மீது தெளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெல்லாரி நகர் காவல்துறையினர் சுதீப் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.