நடிகர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா? : பிரேமலதா விளக்கம்

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து பிரேமலதா விளக்கமளித்துள்ளார். 
நடிகர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா? : பிரேமலதா விளக்கம்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் விஜயகாந்த் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரேமலதா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் சினிமாவில் நடிக்கவில்லை. அவர் கட்சிப் பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சி மட்டும் செய்து ஓய்வில் இருக்கிறார். 

அவர் நடிப்பதாக வந்த தகவல் தவறானது. ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com