ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சன் இணைவது உறுதி ?

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 டிசம்பர் 2021, 1:33 pm IST

அண்ணாத்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் புதிய புதிய தகவலாக வெளியாகிறது. ஆனால் அதுவும் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. 

சமீபத்தில் ஹிந்தி பட இயக்குநர் பால்கி இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. 

இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறார்களாம். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.

இயக்குநர் நெல்சன் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். நெல்சனின் தனது படங்களில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் நடிகர் ரஜினிகாந்த்தை முழு நீள நகைச்சுவை படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.