மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் வேடம் இதுவா ?

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் வேடம் குறித்து இந்தப் படத்தில் நடிக்கும் ராகவன் பகிர்ந்துள்ளார்.  

News image
Updated On :28 ஜூலை 2021, 4:20 pm IST

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் வேடம் குறித்து இந்தப் படத்தில் நடிக்கும் ராகவன் பகிர்ந்துள்ளார். 

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை, மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

இந்தப் படத்தில் யார் யார் என்னென்ன வேடங்களில் நடிக்கிறார்கள் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பொன்னியின் செல்வனைப் படித்த ஒரு சிலர் இந்த வேடத்தில் இவர்கள் நடிக்கிறார்கள் என யூகத்தின் பேரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதைக் காணமுடிந்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் 'சேதுபதி', 'மாரி 2', 'றெக்க' போன்ற படங்களில் நடித்த சிறுவன் ராகவன், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Story image

இந்நிலையில் ராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் , பொன்னியின் செல்வனின் நந்தினி தேவி, பாண்டிய இளவரசன் எனப் பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவியின் வேடத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.