நடிகர் விஷாலின் புதிய படத்திற்காக நடிகர்கள் தேர்வு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்யாவுடன் இணைந்து நடிகர் விஷால் நடித்துள்ள 'எனிமி' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்க, ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இதனையடுத்து தற்போது இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஷால் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க| இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படத்தில் களமிறங்கும் ஹிந்தி நடிகை
நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் தயாரிப்பில் விஷால் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விஷாலின் 32வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் தேவை என்ற விளம்பரம் வெளியாகியுள்ளது.
அதில் ஆண்கள் - 25 வயது முதல் 30 வயது வரை, உயரம் - 5.8 முதல் 6.2 வரை வெள்ளை நிறத்தில் வில்லன் தோற்றத்தில் இருக்க வேண்டும். ஆண்கள் - வயது 25 முதல் 45 வரை, மாநிறத்தில் ரௌடி தோற்றத்தில் இருக்க வேண்டும். சிறுவன் - 6 முதல் 7 வயது வரை மாநிறமாக ஒல்லியான தோற்றத்தில், சராசரியான உயரத்தில் இருக்க வேண்டும்.
இளம் பெண் - 16 வயது முதல் 20 வயது வரை மாநிறமாக ஒல்லியான தோற்றத்தில் சராசரி உயரத்தில் இருக்க வேண்டும் . தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கு முன்னுரைமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க| வதந்திக்கு விடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகிலா
விருப்பமுள்ளவர்கள் வருகிற 15.8.2021 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டுரை இணைப்பை சுடுக்கி விண்ணப்பிக்கலாம் .
#vishal32 #v32 #castingcall #vishalfilmfactory pic.twitter.com/Dw32Eb3qTD
â Johnson PRO (@johnsoncinepro) July 29, 2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்!
தொகுதி மறுசீரமைப்பு - திமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணி ராமதாஸ்

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்பு

5 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த தில்லி இளைஞா்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



