பொது இடத்தில் நடிகர் சிவ பாலாஜியின் கையை ஹேமா கடித்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரைப்பட நடிகர் சங்க தேர்தல் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலலில் பிரகாஷ் ராஜ் தலைமையிலான அணியும், விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதில் விஷ்ணு தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | பவானியின் குற்றச்சாட்டு : பிக்பாஸ் வீட்டில் துவங்கிய பிரச்னை
இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, பிரகாஷ் ராஜ் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவபாலாஜியின் கையைக் கடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் ஹேமாவிடம் கேட்டதற்கு, சிவ பாலாஜியிடம் கேளுங்கள் என்று பதிலளித்தார். ஆனால் சிவ பாலாஜி இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். தேர்தலின் போது பிரகாஷ் ராஜ் அணிக்கும், விஷ்ணு மஞ்சுவின் அணிக்கும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது. அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே ஹேமா அப்படி நடந்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நல்ல ஆதாரங்களுடன் சிக்கிய எ.வ. வேலு: அமைச்சர் ராஜ்மோகன்

வெனிசுவேலா நிலநடுக்கம்! குழந்தை முதல் நாய்க்குட்டி வரை! மீட்புப் பணிக்கு நம்பிக்கை

சிதம்பரம் நந்தனார் மடத்தில் காந்தி மன்றத்தினர் வழிபாடு மற்றும் தியானம்!
இயற்கை அளித்த கொடைதான் முதல்வர் விஜய்: செங்கோட்டையன்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



