லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

அடுத்த படத்துக்காக ஹிந்திப் பட பிரபலத்துடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது சிங்கப் பாதை படத்துக்காக ஹிந்திப் பட ஒளிப்பதிவாளர் டட்லியுடன் இணையவுள்ளார். 

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 1:20 pm IST

சிவகார்த்திகேயன் தனது சிங்கப் பாதை படத்துக்காக ஹிந்திப் பட ஒளிப்பதிவாளர் டட்லியுடன் இணையவுள்ளார். 

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளில் சமீபத்தில் பங்கேற்றிருந்தார்.

டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஷிவாங்கி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  

இந்தப் படத்தையடுத்து அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் என்பவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு சிங்கப் பாதை எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் டட்லி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ஜூங்கா, ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த பூமி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஹிந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ், கோல்மால் 3 ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.