தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நடிகர் விமல் புகார்: தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது

பணமோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 11:13 am

பணமோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னர் வகையறா படத்துக்காக ரூ. 5 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்கள். இப்பிரச்னை தொடர்பாக விமல் மீது நான்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு விளக்கமளித்த விமல், தன்னைத் தான் சிங்காரவேலன் ஏமாற்றி விட்டதாகப் புகாரும் அளித்திருந்தார்.

சிங்காரவேலன் தான் கோபிக்குப் பணம் கொடுக்கவேண்டும். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. சிங்காரவேலன், கோபி ஆகிய இருவர் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் விமல்.

இதற்கு முன்பு, தனது பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விமல். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிங்காரவேலன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது மீது 2021-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தார் சிங்காரவேலன். எனினும் நீதிமன்ற உத்தரவுகளைச் சரியாகப் பின்பற்றாததால் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இன்று விருகம்பாக்கம் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிங்காரவேலன் மீது விமல் மற்றொரு புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிங்காரவேலன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது 5 பிரிவுகளில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் சிங்காரவேலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.