மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ‘பொன்னியின் செல்வன்’

'ஐமேக்ஸ்’ தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பொன்னியின் செல்வன் அடைந்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2022, 1:00 pm IST

'ஐமேக்ஸ்’ தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பொன்னியின் செல்வன் அடைந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருள்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாவதால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 ஆம் தேதி பொன்னியின் செல்வன் டிரைலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், உலகளவில் இப்படம் திரையிடப்பட உள்ளதால் பெரிய திரை, துல்லியமான காட்சிக் கடத்தல்கள், ஒலி அமைப்பு கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ’பொன்னியின் செல்வன்’ வெளியாகும்  என்றும் தமிழில் இதுவே முதல் ஐமேக்ஸ் திரைப்படம் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.