நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க! 

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன். 

News image
Updated On :3 டிசம்பர் 2022, 1:50 pm IST

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

பொன்னியின் செல்வன் படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தில் பொன்னி நதி பாடலும், தேவராளன் ஆட்டம் பாடலும் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. இந்த பாடலை எழுதியவர் கவிஞர், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படத்திற்கு இளங்கோ பாடல் எழுதுவதாக செய்திதாள்களில் வரவே அவர் அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, “என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது நண்பர்கள், “ரசிக்கற மாதிரி கிசு கிசு வர்றது அதிசயம். நிறைவேறட்டும்” என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

தூய தமிழில் தமிழ் சினிமாவில் பாடல்கள் வர இப்படியான கவிஞர்கள் அதிகமாக பாடல் எழுத வேண்டுமென்பதே தமிழ் ரசிகர்களின் ஆசை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.