
நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் அருண் விஜய் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இயக்குநர் அருண் வைத்தியநாதன் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்திருப்பதாக அறிவித்தார்.
இதையும் படிக்க | ’மகான்’ வெளியீட்டுத் தேதி குறித்து தகவல்
இந்த நிலையில் நடிகை மீனா தான் உட்பட தன் குடும்பத்தினர் அனைவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.