ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

'ஜெயிலர்' ரஜினியுடன் மோதும் ராக்கி

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ராக்கி பட நடிகர் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:25 pm IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ராக்கி பட நடிகர் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் பட பாணியில் ஜெயிலர் படப்பிடிப்பு துவங்கும் முன்பே டீசர் வெளியிட நெல்சன் முடிவெடுத்துள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது.  

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்துடன் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவராஜ்குமார் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்திருந்தார். 

மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம். ஆனால் இந்த தகவல்கள் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. 

இந்த நிலையில் தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த வசந்த் ரவி இந்தப் படத்தில் நடிக்கிறாராம். ராக்கி படத்தில் வசந்த் ரவியின் நடிப்பு விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.