இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

டான் இயக்குநருடன் இணைகிறாரா விஜய் ?

நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் அந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது. 

Published On :

நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் அந்தத் தகவல் மறுக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய்யின் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

இதனையடுத்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது. 

இந்த நிலையில் பீஸ்ட் பட தோல்வியால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறாராம். இந்தப் படத்தை டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் தரப்பில் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.