ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

'அவன் இல்லை...' எஸ்.பி.பி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுத இளையராஜா

எஸ்பிபி 75 நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

News image
Updated On :13 ஜூன் 2022, 4:41 pm IST

விஜய் டிவி வெளியிட்டுள்ள எஸ்பிபி 75 நிகழ்ச்சியின் ப்ரமோ  ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3 ஆம் தேதி எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரசாந்த், வைரமுத்து ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். 

இந்த நிகழ்ச்சி வருகிற ஜூன் 19 ஆம் தேதி ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதற்கான முன்னோட்டத்தை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் இளையராஜா மேடையில் இளைமை எனும் பூங்காற்று என்ற பாடலை கண் கலங்கியபடி பாடினார். பின்னர் மேடையை விட்டு இறங்கியதும் அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது. 

இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மேடையேறிய ரஹ்மான் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலைப் பாடினார். இந்த நிகழ்ச்சியை வெங்கட் பிரபு தொகுத்து வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.