
நடிகர் மாதவன் இயக்கிய ’ராக்கெட்ரி-நம்பி விளைவு’ படத்தை வியந்து பாராட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையடப்பட்டதும் அப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “இந்திய சினிமாவிற்கு புதிய குரலைத் தந்திருக்கும் மாதவனுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் மாதவனுடன் சிம்ரம் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் மாறியிருக்கிறது.
இதையும் படிக்க | புதிய பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வருகிற ஜுலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ராக்கெட்ரி - நம்பி விளைவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் இயக்குநராகவும் மாறி தன் நீண்ட நாள் இயக்குநர் கனவை அடைந்திருக்கிறார் மாதவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.