நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் 4-வது பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கம் படத்தில் நடித்தார். அதிரடியாக உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, ’சிங்கம் - 2’ 2013 ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்தது.
பின்னர், சிங்கம் 3 பாகம் வெளியாகி தோல்விப்படமாக அமைந்தது.
இந்நிலையில், சிங்கம் படத்தின் 4-வது பாகத்திற்கான கதை விவாதத்தில் இயக்குநர் ஹரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அருண் விஜய்யின் ‘யானை’ திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அதனால், மீண்டும் வெற்றிப்படத்தை கொடுக்க ஹரி தீவிரமாக உள்ளாராம்.
சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



