''நம்ம எப்போ சார் படம் பண்றோம்? ''கேள்வி கேட்ட வெங்கட் பிரபுவை கலாய்த்த சிவகார்த்திகேயன்

வெங்கட் பிரபுவின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். 
''நம்ம எப்போ சார் படம் பண்றோம்? ''கேள்வி கேட்ட வெங்கட் பிரபுவை கலாய்த்த சிவகார்த்திகேயன்
Published on
Updated on
1 min read

வெங்கட் பிரபுவின் கேள்விக்கு சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். 

இயக்குநர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இயக்குநர் வெங்கட் பிரபு ''சகோ, நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்? அப்றோம் நம்ம அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா?'' என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ''ஷூட்டிங் எப்ப வேணும்னாலும் போலாம் சார். கதை எப்ப சார் சொல்லுவீங்க?. எனக்கு உங்க கிட்ட ஒரு கேள்வி இருக்கு சார். இந்தப் படத்துல பிரமேஜி பிரதரோட நான் என்ன ரோல்ல சார் பண்றேன்?'' என தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கு வெங்கட் பிரபு, ''கதையா?'' என வடிவேலு உணர்ச்சிவசப்பட்டு அழும் எமோஜியைப் பகிர்ந்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் ''ஷூட்டிங் பிளான் பண்றீங்களா'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

சில நாட்களுக்கு முன்னதாக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவலை மூவரின் உரையாடல்கள் உறுதி செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com