மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரபல திரைப்பட பாடகர் பம்பா பாக்யா காலமானார்

பிரபல திரைப்பட பாடகரும், விஜய்யின் ஹிட் பாடலான 'சிம்டாங்காரன்' பாடலைப் பாடிய பம்பா பாக்யா(49) மாரடைப்பால் காலமானார். 

News image
பம்பா பாக்யா
Updated On :2 செப்டம்பர் 2022, 5:24 am

DIN

பிரபல திரைப்பட பாடகரும், விஜய்யின் ஹிட் பாடலான 'சிம்டாங்காரன்' பாடலைப் பாடிய பம்பா பாக்யா(42) மாரடைப்பால் காலமானார். 

மெட்ராஸ் கிக் சிங்கிள்ஸில் ‘எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வைக்கிறே..’ பாடல் மூலம் தமிழ் இசை உலகிற்கு அறிமுகமானவர் பாம்பா பாக்கியம்.

அதன்பிறகு, ஏ.ஆர்.ரகுமான், ஹிப் ஹாப் ஆதி போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில்  பாடியுள்ளார். 

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.O படத்தில் இடம்பெற்ற 'புல்லினங்கால்' பாடலைப் பாடியவர். அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிகில், சர்கார், சர்வம் தாளமயம், யாரவின் சியோட் ஆகிய படங்களில் பாடினார்.

விஜய் நடித்த ‘சிம்டாங்காரன்’ பாடலை பாம்பா பாக்கியா பாடி எல்லா இடங்களிலும் ஹிட் அடித்தார். கானா பாடல் பின்னணியில் வெளியான சிம்டாங்காரன் பாடல், சூப்பர் ஹிட் அடித்ததோடு, பாம்பே பாக்யாவுக்கும் மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்றுள்ள  'பொன்னி நதி' பாடலையும் பாம்பே பாக்யா பாடியுள்ளார்.  

பொன்னி நதி' பாடலில் பாம்பே பாக்யாவின் குரல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் திறமையான பின்னணிப் பாடகரான பாம்பே பாக்யா பெரியவில் பேசப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவருக்கு வியாழக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு, அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத் துடிப்பு, சிறுநீரக செயல்பாடுகள் குறைந்துள்ளது மற்றும் வயிற்றில் அதிகப்படியான திரவம் உள்ளதால், வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாம்பா பாக்யா உயிரிழந்தார். 

அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவருக்கு இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா உள்ளிட்ட இசைத் துறையினரும், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.