இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ரஜினியுடன் ஏ.ஆர். ரஹ்மான்: வைரலாகும் செல்ஃபி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Published On :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஜினி கதையில் அவரே தயாரித்து நடித்த பாபா திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ரீரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் சில காட்சிகளுக்கு மீண்டும் ரஜினி டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ள நிலையில், இசையை டால்பி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகின்றது. பாபா படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தை ரீரிலீஸ் செய்ய இசை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான் அவருடனும், ஐஸ்வர்யா ரஜினியுடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.

Story image

அந்தப் புகைப்படத்தை ‘இரண்டு அற்புதமான மனிதர்கள் சந்திக்கும் போது’ எனக் குறிப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.  தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Story image

இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதும், இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.