12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நடிகர் விஜய் பாணியில் இசையமைப்பாளர் தமனின் வைரல் ட்விட்!   

வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமனின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது. 

Published On :

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ரஞ்சிதமே பாடல் 90 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பாடலும் சிம்பு குரலில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 

2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் 3வது பாடலுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தமனின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “நண்பா வாரிசு ஆல்பம்” என பதிவிட்டு தீ, இசைக்கருவிகள் எமோஜிகளை பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் வாரிசு ஆல்பத்தினை கேட்டு தீ மாதிரி இருக்கு நண்பா என்று கூறியதால்தான் தமன் இப்படி ட்விட் போட்டிருப்பாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா எப்போது என கேட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.