உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கேலிக்குள்ளான நடிகர்! 

நடிகர் அஜித் குமாரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தினை பகிர்ந்து ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் நடிகர் கிருஷ்ணா. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:21 pm IST

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

துணிவு படத்தில் இரண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது மூன்றாவது பாடலின் வரிகளை ஜிப்ரான் சமீபத்தில் வெளியிட்டார்.3வது பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது.

கழுகு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. இவர் நடிகர் அஜித்தின் புதிய புகைப்படத்தினை பகிர்ந்து தீயாக இருப்பதாக எமோஜிக்களை பதிவிட்டு இருந்தார். இந்தப் புகைப்படம் அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிடவில்லை. ரசிகர்கள் எடிட் செய்த ஒன்று. இது தெரியாமல் பகிர்ந்து இணையத்தில் கிண்டலுக்குள்ளாகி வருகிறார். இணையத்தில் பகிரும் முன்பு உண்மைதன்மை பரிசோதிக்க வேண்டுமென அவரது பதிவிற்கு கீழ் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Story image

துணிவு படம் பொங்களுக்கு வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.