தமிழில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனானவர் சந்தானம். சமீபத்தில் காமெடி த்ரில்லராக வெளிவந்த ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரையரங்குகளில் வெளியானது.
தெலுங்கு படத்தின் ரீமெக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சனம் ரீதியாக நன்றாக வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கடந்த வாரம் இந்தப் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது. புத்தாண்டுக்கு பிரபல தமிழ் தொலைக்காட்சியிலும் வெளியாக உள்ளது.
தற்போது சுற்றுலா சென்றபோது புலியின் வாலை பிடித்து விடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் “இதுக்கு பேர்தான் புலி வாலை புடிக்கிறதா” என ஜாலியாக பதிவிட்டு இருந்தார்.
இந்த விடியோ வைரலானது. ஆனால் அதேசமயம் அவருக்கு பல எதிர்வினைகளும் வந்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு பலரும், “இதெல்லாம் மிருக வதை”, “அன்பு கிடையாது”, “இதற்குபேர்தான் சுற்றுலாவா?” என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகத்தில் டிச.29 வரை மது விற்பனைக்குத் தடை!
’துணிவு’ டிரைலர் குறித்து தகவல்!
‘நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை. அப்போ இதென்ன?’ - ரசிகர்கள் கிண்டல்!
துணிவு படத்திற்கு வானத்தில் வேற லெவல் புரமோஷன்!
அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கேலிக்குள்ளான நடிகர்!
வாரிசு இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு