அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

'வலிமை' பட புதிய வெளியீட்டுத் தேதி இதுவா ?

வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. 

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 11:37 am IST

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கரோனாவினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல குறைந்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனையடுத்து பெரிய படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும், இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளன. விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் வருகிற 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் வெளியாகவிருக்கின்றன. மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் பாண்டிராஜ் அறிவித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.