பாகுபலி, கேஜிஎஃப் ஆகிய படங்கள் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வட இந்தியாவில் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, புஷ்பா தி ரூல், ராதே ஷியாம் படங்கள் ஹிந்தி திரையுலகில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழ் நடிகர்களும் ஹிந்தி ரசிகர்களைக் கவரும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், தென்னிந்திய கதைகள் மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்கு முக்கிய காரணம்
1, அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் பிணைந்துள்ளனர்.
2.அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் மீது அன்பு செலுத்தும் முறை என்பது தனித்துவமானது. மேற்கத்திய முறையில் அவர்கள் நடந்துகொள்வதில்லை.
3. தொழிலில் அவர்கள் காட்டும் மதிப்பும் ஆர்வமும் இணையற்றது.
அவர்களை ஹிந்தி திரையுலகினர் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஹிந்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன்னை இயேசுவாக சித்தரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


