விஜய் - இயக்குநர் வம்சி இணையும் படம்: வசனம் எழுதும் தேசிய விருது பெற்ற பட இயக்குநர்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதவிருக்கிறார். 
விஜய் - இயக்குநர் வம்சி இணையும் படம்: வசனம் எழுதும் தேசிய விருது பெற்ற பட இயக்குநர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குநநர் வம்சியுடன் விஜய் இணையும் படம் குறித்து நாளுக்கு நாள் சுவாரசியமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய் நடித்துள்ள படம் பூவே உனக்காக போன்ற குடும்ப  கதையாக இருக்கும் எனவும், இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றும் தெரிவித்தார். 

இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதவுள்ளாராம். ராஜு முருகன் படங்களில் வசனங்கள் ஏற்கனவே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ராஜு முருகன் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  விஜய் - இயக்குநர் வம்சி இணையும் படம் தமிழ் - தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com