நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தனது மகள் ஐஸ்வர்யாவின் பாடலை வெளியிட்டு வாழ்த்திய ரஜினிகாந்த்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

தனது மகள் ஐஸ்வர்யாவின் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:13 pm IST

நீண்ட இடைவேளைக்கு பிறகு பாடல் ஒன்றை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் பாடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். 

தமிழில் பயணி எனத் துவங்கும் இந்தப் பாடலை அனிருத் பாட, ஜானி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இந்தப் பாடல் தற்போது இந்தப் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

பாடல் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில்,  ''கடந்த 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக என் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி.  அவருக்கு எனது வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Story image

மலையாளத்தில் யாத்ராகாரன் என்ற பெயரிலும், தெலுங்கில் சஞ்சாரி என்ற பெயரிலும் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர். 

Story image

இதனையடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் லாரன்ஸுடன் இருக்கும் படத்தைபகிர்ந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.