ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜூனியர் என்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

News image
Updated On :20 மே 2022, 12:32 pm IST

பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் என சமீபகாலமாக வெளியான, வெளியாகவுள்ள பல பெரிய படங்களுக்கு அனிருத் தான் இசை. தமிழ்த் திரையுலகின் நெ.1 இசையமைப்பாளராக உள்ள அனிருத், அடுத்ததாக பெரிய தெலுங்குப் படம் ஒன்றுக்கும் இசையமைக்கிறார்.

சிரஞ்சீவி நடிப்பில் கொரடாலா சிவா இயக்கிய படம் - ஆச்சார்யா. ஏப்ரல் 29 அன்று திரையரங்குகளில் வெளியான ஆச்சார்யா படம், ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. 

அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கொரடாலா சிவா. இப்படத்துக்கு இசை - அனிருத். அவர் இசையமைக்கும் 4-வது தெலுங்குப் படம் இது. ரத்னவேலு, சாபு சிரில், ஸ்ரீகர் பிரசாத் எனப் பல பிரபலமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். 

ஜூனியர் என்டிஆர்  இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதையொட்டி அவர் நடிக்கும் 30-வது படம் பற்றி அறிவிப்பு விடியோவுடன் வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.