நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ படத்தினை இயக்குநர் ஜாக் ஹாரிஸ் இயக்கியுள்ளார்.
மதயானைக் கூட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் கதிர். தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிப்பவர். இவர் நடிப்பில் உருவான ‘சுழல்’ திரைப்படம் அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி நடராஜ், ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யூகி’. இசை - ரன்ஜின் ராஜ். பின்னணி இசை- டான் வின்செண்ட்.
பொறியாளன் படத்தில் தமிழில் அறிமுகமான ஆனந்திக்கு அடுத்த படமான கயல் மிகப்பெரிய பெயரினை பெற்று தந்தது. ‘யூகி’ படம் திரையரங்குகளில் (நவ.18ஆம் நாள்) நேற்று வெளியாகியுள்ளது. அவரது படம் முதன்முதலாக மலையாளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கயல் ஆனந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமிழ், மலையாளம் ரசிகர்களுக்கு க்யூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
என்னுடைய படம் யூகி ரிலீஸ் ஆகிருக்கு. மலையாளத்திலும் ரிலீஸ் ஆகிருக்கு. அனைவரும் படத்தின் டிரைலரை பாருங்கள். டிரைலர் பிடித்திருந்தால் படத்தையும் பாருங்கள்.
Hello guys pic.twitter.com/iwvef8hYCr
â Anandhi (kayal) (@anandhiactress) November 18, 2022
Related Article
துணிவு படத்தின் வெளிநாட்டு உரிமம், ஓடிடி உரிமம் யாருக்கு? அதிகாரபூர்வ அறிவிப்பு!
சினிமாவில் எதுவுமே செய்யாமல் நடிகர்கள், நடிகைகள் புகழை எடுத்துக் கொள்கிறார்கள்: பிரியங்கா சோப்ரா
ஆமிர் கான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!
கோமாளி, லவ் டுடே: இதில் எது சிறந்த படம்? -‘லவ் டுடே’ கதாநாயகியின் சுவாரசிய பதில்!
அருண் விஜய் பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் போஸ்டர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








