மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
விக்ரம் மகன் துருவ் விகரம் வைத்து எடுக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மாரி செல்வராஜ் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ஒரு போஸ்டரை வெளியிட்டு நாளை காலை மற்ற அறிவிப்புகள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் இலையின் நடுவில் 4 சிறுவர்கள் ஓடும் காட்சி இடம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.