இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பொய்கள் பெரிதாக இருந்தாலும் உண்மையை விட சிறியது: அனுபம் கெர்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை வெறுப்புணர்வு படமென கூறியது அசிங்கமானது என நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:20 pm IST

1990-ன் தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படமாக - தி காஷ்மீா் ஃபைல்ஸ் எடுக்கப்பட்டது. அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்தப் படம், கடந்த மாா்ச் 11-ம் தேதி வெளியானது. இயக்கம் - விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இப்படத்திற்கு பாரதிய ஜனதாக் கட்சி வரி விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விமர்சததிற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நவம்பர் 28ஆம் நாள் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இறுது நாளில் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லபிட் என்பவர், “தொ காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெறுப்பை விதைக்கும் மோசமான படம். இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இந்த படத்தினை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது” என தெரிவித்தார். 

இந்த கூற்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சையாகவும் மாறியது. இந்த படத்தில் நடித்த அனுபம் கெர் இதுக்குறித்து கூறியதாவது: 

இனப்படுகொலை சரியென்றால் காஷ்மீரி பண்டிதர்களின் வெளியேற்றமும் சரிதான். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அதன் பிறகு உடனடியாக டூல்-கிட் கும்பல் செயல்பட்டது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட யூதர்களின் சமூகத்தில் இருந்து வந்த அவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது வெட்கக்கேடானது. 

பொய்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் உண்மையை விட மிகச்சிரியதே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.