குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தெலுங்கு ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் தெலுங்கு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2022, 11:52 am IST

சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் வாரிசு படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் தெலுங்கு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு இசை - தமன். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

சமீபத்தில்  'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 7 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதற்கிடையே ‘வாரிசு’ படம் தெலுங்கு மொழியில் ‘வாராசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இதையடுத்து நாளை(30.11.22) காலை 9.09 மணியளவில் தெலுங்கு ரஞ்சிதமே பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ரஞ்சிதமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், தெலுங்கு ரஞ்சிதமேவுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.