சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

விரைவில் ’ஏகே 62’ படப்பிடிப்பு!

நடிகர் அஜித்குமார் ’துணிவு’ படத்திற்குப் பின் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

விக்னேஷ் சிவன் - அஜித்குமார்

Updated On :13 அக்டோபர் 2022, 11:49 am IST

நடிகர் அஜித்குமார் ’துணிவு’ படத்திற்குப் பின் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ​

இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித்குமார் பங்குபெறும் பிற காட்சிகளைப் படமாக்க படக்குழு கடந்த சில நாள்களுக்கு முன் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றது.

இந்நிலையில், நேற்று பாங்காக்  படப்பிடிப்புடன் துணிவு படப்பிடிப்பு நிறைவு பெற்றதால்  அஜித் சென்னை திரும்ப உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அஜித்குமார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள ‘ஏகே 62’ படத்தின் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதால் விரைவில் அதன் படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.