ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

விஜய் சேதுபதி - வடிவேலு இணையும் படம் - இயக்குநர் யார் தெரியுமா ?

விஜய் சேதுபதி மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :13 அக்டோபர் 2022, 2:05 pm IST

மாஸ்டர், கடைசி விவசாயி, விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள தற்போது ஹிந்தியிலும் கால்பதித்துள்ளார். 

ஹிந்தியில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து 'மெரி கிரிஸ்துமஸ்',  'மாநகரம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'மும்பைகர்' போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் உச்சகட்டமாக அட்லி இயக்கிவரும் 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களின் பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவை படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தை ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்குகிறார். 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக வடிவேலு கைகோர்க்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.