மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிக்பாஸில் இருந்து பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து - இயக்குநர் சீனு ராமசாமி கருத்து

பிக்பாஸிலிருந்து பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :25 அக்டோபர் 2022, 9:10 am

DIN

பிக்பாஸிலிருந்து பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் துவங்கியதிலிருந்து கிட்டத்தட்ட ஜி.பி.முத்து தான் ஆதிக்கம் செலுத்தினார். பிக்பாஸ் வீட்டில் அவரது பேச்சு, நடவடிக்கைகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன. 

நிச்சயம் ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் நினைக்கத் துவங்கினர். ஆனால் தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை, மகன்தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். 

அவர் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 3வது சீசனில் வனிதா பாதியில் வெளியேறி, பின்னர் வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக்பாஸில் நழைந்தது போல ஜி.பி.முத்து மீண்டும் வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜி.பி.முத்து குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ''வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜி.பி.முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

வெற்றி பெற
தகுதியான
ஒரு போட்டியாளன்,

அதன் வருமானம்
வெகுமானம்
யாவற்றையும்
பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காக

புகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர் கேட்டும்
கேளாமல் #bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற
தமிழ்மகன்#GPமுத்து தான் தீபாவளியின்
வெற்றி நாயகன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.