
ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் நாளை(ஆகஸ்ட் 10) திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்வதாகவும், ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | விஜய் பட இயக்குநர் காலமானார்
2010 ஆம் ஆண்டு வரை தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.