பிக் பாஸ் சீசன் 7-ல் ஆண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளியான 6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வரும் செப்டம்பர் மாதம் சீசன் 7 துவங்கப்படும் என்றும், இந்த முறையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் 7வது சீசனில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய சீசன்களில் பெண் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, லாஸ்லியா, அனிதா சம்பத் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின் மறுதேதி அறிவிப்பு!
இதுவரை வெளியான பிக் பாஸ் சீசன்களில் ஆண் செய்தி வாசிப்பாளர் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், முதல் முறையாக ரஞ்சித் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.