இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் விஷாலின் 34வது படத்தை இயக்குநர் ஹரி இயக்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014 இல் வெளியான பூஜை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக இணையும் இப்படத்திற்கு ‘ரத்னம்’ எனப் பெயரிட்டுள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: காந்தாரா 2-ல் ரிஷப் ஷெட்டியின் சம்பளம் இவ்வளவா?