மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

டென்மார்க்கில் சூர்யா - ஜோதிகா: வைரல் விடியோ!

சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுவந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :3 ஜூலை 2023, 5:22 pm IST

சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுவந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இப்படம் முடிந்தததும் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன்  ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  ஜோதிகா உடற்பயிற்சி மையத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட விடியோ வைரலானது.

இந்த நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா  தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்-க்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.