இது பணம், புகழைத் தாண்டிய படம்: பார்வதி நெகிழ்ச்சி

நடிகை பார்வதி தங்கலான் படம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இது பணம், புகழைத் தாண்டிய படம்: பார்வதி நெகிழ்ச்சி

நடிகை பார்வதி தங்கலான் படம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில், நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘அன்பை விட, பணத்தை புகழை விட உண்மையைக் கொடு’ என்கிற வரியை சில நாள்களுக்கு முன் என் நண்பர் அனுப்பியிருந்தார். அந்த உண்மையான உழைப்பைத் தங்கலானுக்கு கொடுத்திருக்கிறேன். எனக்கு திருப்தியைத் தந்த படம்’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com