2002-ல் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார். 2018 டிசம்பரில் பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அமேசான் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா, சமந்தா, ரிச்சார்ட் மேட்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானும் நடிக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா இந்த தொடரில் முதன்மை கதாபத்திரமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#Citadel S1 will premiere on Amazon Prime on April 28th.
â Streaming Updates (@OTTSandeep) March 6, 2023
Eng. Hin. Tam. Tel. Kan. Mal. pic.twitter.com/nxtJrIhWBv
இந்தத் தொடரிலுள்ள மொத்தம் 6 எபிசோடுகளில் முதல் 2 எபிசோடுகள் ஏப்ரல் 28ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. வாரம் வராம் அடுத்த எபிசோட்கள் வெளியாகும்.
இதையும் படிக்க: லியோ படத்தில் இணைந்த ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகர்!
அமேசான் ஸ்டுடியோஸ் வழங்கும் சௌத் வெஸ்ட் திரைப்பட விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். இதில் அவர் சம்பளம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா பேசியதாவது:
நான் இதை சொல்வதால் எனக்கு பிரச்னை ஏற்படலாம். நான் சினிமாவில் 22 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். 70 திரைப்படங்கள் 2 டிவி தொடர்கள் நடித்துள்ளேன். ஆனால் சிட்டாடல் தொடர் நடிக்கும்போது மட்டுமே எனக்கு ஆண் நடிகர்களுக்கு சமமாக ஊதியம் கிடைத்துள்ளது. இது எனக்கு சிரிப்பாக இருக்கிறது ஆனால் இது ஒரு வகையில் பத்தியக்காரத்தனமானது. ஏனெனில் குறைவான சம்பளம் பெற்ற படத்திற்கும் சமமாக எனது உழைப்பினையும் நேரத்தினையும் கொடுக்கிறேன். அமேசான் நிறுவனம் என்னிடம் நீங்கள் இணை நடிகையாக நடித்துள்ளீர்கள் அதனால் இந்த சம்பளம் உங்களுக்கு பொருத்தமானது எனக் கூறினர். ஆமாம் இது சரியானதென நானும் கூறினேன். ஹாலிவுட்டில் இதுமாதிரி முடிவெடுக்கும் பெண்கள் சிலர் இருப்பதால் இது சாத்தியமாகிறது. இல்லையேல் இது சாத்தியமாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோர் கைது!

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!

உதயநிதி ஸ்டாலின் கைது: திருவள்ளூர் சாலை மறியலில் திமுகவினர் கைது!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



