நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமூக வலைதள விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிப்பதில்லை: வெற்றிமாறன் 

இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணல் ஒன்றில் சமூக வலைதள விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிப்பதில்லை எனக் கூறியுள்ளார். 

News image
Updated On :20 நவம்பர் 2023, 5:27 pm IST

இயக்குநர் பாலு மகேந்திராவின் பட்டரையில் இருந்து வந்த வெற்றிமாறனின் பொல்லாதவன் படம் அனைவரையும் கவர்ந்தது. ஆடுகளம் தேசிய விருது பெற்றது. விசாரணை படமும் மக்களிடம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

தனுஷுடன் அசுரன், வட சென்னை ஆகிய படங்கள் மிகுந்த வரவேற்பினை பெற்றது. அதிலும் அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது. சமீபத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்த விடுதலை படம் வெளியானது. விரைவில் இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. 

Story image

இந்நிலையில் யூடியூப் பக்கத்தில் தமிழ் சினமாவின் இயக்குநர்களுடன் சேர்ந்து நடந்த கலந்துரையாடலில், “7 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதள விமர்சனங்கள் மூலம் படத்தின் வசூல் பாதிக்கவில்லை. அது மிகவும் குறைவாக இருந்தது. தற்போது  அது சற்று கூடுதல் ஆகியிருக்கிறதே தவிர அப்போதும் அதன் சதவிகிதம் குறைவுதான்.  பொதுமக்களிடன் இந்த சமூக வலைதள விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனக் கூறியிருந்தார். 

சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.