சூரி கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது.
‘ஆனந்தம்’, ‘ரன்’, 'சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் லிங்குசாமி. அடுத்தடுத்து இவர் இயக்கிய, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டைக்கோழி - 2’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குகிறார்.
நடிகர் சூரி நடிப்பில் 'விடுதலை - பாகம் 2' மற்றும் 'கொட்டுக்காளி' படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில் 'எதிர்நீச்சல்', 'காக்கிசட்டை' படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.
இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: யோகி பாபுவின் மிஸ் மேகி படப்பிடிப்பு நிறைவு!
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது.