தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முற்றிலும் பொய்யானது: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்! 

நடிகை நித்யா மேனன் குறித்து பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானதென கூறியுள்ளார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2023, 4:28 pm

DIN

2006-ல் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக  அறிமுகமானவர்  நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. 

தற்போது, சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில், அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’ தொடர் அமேசான் பிரைம் தளத்தில் செப்.28-ல் வெளியாகிறது. 

“தெலுங்கு சினிமாவில் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். முக்கியமாக, தமிழ் ஹீரோ நடிகர் ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்” என நித்யாமேனன் கூறியதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இது முற்றிலும் பொய்யானதென நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். மேலும் இது மாதிரி எந்த நேர்காணலும் தான் தரவில்லையெனவும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.