தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஏ சான்றிதழுடன் வெளியாகும் ஃபைட் கிளப்!

விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2023, 1:25 pm IST

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். 

உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் 'ஃபைட் கிளப்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

கடந்த டிச.2 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்'  படத்தின் டீசரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் டீசரின் இறுதியில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இளையராஜாவின் ’என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலின் பின்னணி இசையை அடிதடி காட்சிகளுடன் சேர்த்திருந்தது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், ஃபைட் கிளப் படத்தில் அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், ஆக்சன் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

டீசர் மூலம் யூடியூப்பில் 3.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.