குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

'என்னை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்..’: பிரபல நடிகர் உருக்கம்

தன்னை துன்புறுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள் என பிரபல நடிகர் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

News image
Updated On :15 பிப்ரவரி 2023, 4:15 pm IST

தன்னை துன்புறுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள் என பிரபல நடிகர் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

‘ஜோசப்’, ‘ஒன்’, ‘நயாட்டு,’ ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோஜூ ஜார்ஜ் மலையாளத்தில் முக்கியமான நடிகர்.

தற்போது, இவர் நடிப்பில் ‘இரட்டா’ என்கிற படம் வெளியாகியுள்ளது. இதில் இரட்டை வேடங்களில் ஜோஜூ நடித்துள்ளார். 

இந்நிலையில், அவர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருந்தாலும் ’இரட்டா’ புரோமோஷனுக்காக மீண்டும் வந்தேன். ஆனால், சிலர் தொடர்ந்து என்மீது அவதூறுகளை சுமத்துகிறார்கள். என்னை துன்புறுத்துவதை தயவுசெய்து நிறுத்துங்கள். என் பணியில் மிகக்கடினமான காலகட்டத்தில் உள்ளேன். என்னைக் கலைஞனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Story image

ஜோஜூ ஜார்ஜ் கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளத்தில் உள்ள வாகமனில் நடைபெற்ற ஜீப் ரேஸில் அதிவேகமாக  ஜீப்பை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. பின், அதையொட்டிய விமர்சனங்களும் எழுந்ததால்  அவர் மீது விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ரேஸில் பங்கேற்றதாகவும் ஜீப் ரேஸ் நடைபெற்ற இடம் விவசாயம் நிலம் என்பதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.