‘யாரடி நீ மோகினி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை - அனிருத்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
தற்போது அடுத்தப் படம் யாருடன் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன். வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியிலிருந்து வரும் பொய்யான செய்திகளையோ, விளம்பரங்களையோ யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவேன்.
‘நான் ஒரு வியாபாரி; கலைஞன் கிடையாது’- துணிவு படத்தின் இயக்குநர் அதிரடி கருத்து!
விஜய் படத்துடன் மோதும் பிரியா பவானி சங்கர்?
‘சல்மான் கானுடன் திருமணம் எப்போது?’- பூஜா ஹெக்டேவிடம் ரசிகர் கேள்வி!
‘வலிமை படம் தோல்விக்கு இதுதான் காரணம்...’-இயக்குநரின் அதிரடி பதில்!
விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்!