வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மீனா தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிப்பு!

கடந்த சில நாள்களுக்கு முன்பு தாலாட்டு தொடர் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீனா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

News image
Updated On :18 ஜூலை 2023, 4:26 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள மீனா தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாலாட்டு தொடர் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீனா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்தத் தொடரில் இந்து செளத்ரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஆனந்த ராகம் தொடரில் நடித்தவர். 

பிரிந்துபோன இரு குடும்பங்களை இணைப்பதற்காக மீனா மேற்கொள்ளும் முயற்சிகளே மீனா தொடரின் திரைக்கதையாக அமையவுள்ளது. 

Story image

இந்தத் தொடர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தின் கதையைப் போன்று இருப்பதாக ரசிகர்கள் பலர் கிண்டலடித்து வருகின்றனர். எனினும் இந்தத் தொடரின் முன்னோட்ட விடியோ பலரைக் கவர்ந்துள்ளதால், இந்தத் தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்து பலரிடையே எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நண்பகல் 12 மணியளவில் மீனா தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.